தொண்டை நாடு - கச்சி ஏகம்பம்

அமைவிடம் : .
வரிசை எண் : 1
இறைவன் : ஏகாம்பரநாதர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மாமரம்
சிறப்பு : மணலாலான லிங்கம் (சுயம்பு), சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில்தான் இடக்கண் பார்வை பெற்றார்
தீர்த்தம் : சிவகங்கை
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஏகம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631502. காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 044-27222084

இருப்பிட வரைபடம்


ஆலந்தானுகந்து அமுது செய்தானை
    ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
    சிந்திப்பாரவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
    காணக்கண் அடியேன் பெற்றவாறே 
    	           - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 ஆலந்தானுகந்து


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க