banner
திருவாழ்கொளிப்புத்தூர் (திருவாளப்புத்தூர், வாளொளிப்புத்தூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 244 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 17 கி.மீ. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு என்னும் இடம் வந்து அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 232 கி.மீ., சென்னையிலிருந்து 282 கி.மீ. திருச்சியிலிருந்து 158 கி.மீ. மதுரையிலிருந்து 278 கி.மீ.
வரிசை எண் : 83
சிறப்பு : அருச்சுனனுடைய வாளை ஒரு மரப் புற்றில் ஒளித்து வைத்துப் பின் இறைவன் அவனுக்குத் தந்த தலம். அதனால் வாள் ஒளி புற்றூர் என்றாயிற்று. பின்பு மருவி திருவாளப்புத்தூர் ஆனது.
இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவி : பிரமகுந்தளாம்பாள், வண்டமர்பூங்குழலி
தலமரம் : வாகை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர் & அஞ்சல் – 609 205. மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 11.30 ;மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 9842538954, 9976782952

இருப்பிட வரைபடம்


சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார்
ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார்
தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர் உளாரே 
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க