banner
திருநாரையூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 215 கி.மீ., சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் 15 கி.மீ. பிரதான சாலையிலிருந்து இடப்புறம் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 205 கி.மீ., சென்னையிலிருந்து 255 கி.மீ. திருச்சியிலிருந்து 115 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 87
சிறப்பு : நம்பியாண்டார்நம்பியின் அவதாரத்தலம். திருமுறைகள் நமக்குக் கிடைப்பதற்குக் காரணமாயிருந்த பொல்லாப்பிள்ளையார் அருள்பாலிக்கும் தலம். நாரை வழிபட்ட தலம். பொல்லாப்பிள்ளையாரின் சந்நிதியில் திருமுறைக் கிடைத்த வரலாற்றினை விளக்கும் சித்திரங்கள் உள்ளன.
இறைவன்: சௌந்தரநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : புன்னாகம்
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சௌந்தரநாதசுவாமி திருக்கோயில், திருநாரையூர் & அஞ்சல் – 608 303. (வழி) லால் பேட்டை, காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30 ;மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 04144-208879

இருப்பிட வரைபடம்


செம்பொன்னை நன்பவளம் திகழும் முத்தைச்
செழுமணியை தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாயமலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம்பெருமானை நாதன்தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே 
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 செம்பொன்னை நன்பவளம்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க