banner
சோழநாடு - திருவலஞ்சுழி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 240 கி.மீ., கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக 9 கி.மீ. சென்றால் இத் தலம். சுவாமிமலைக்கு அருகில். செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 82 கி.மீ. மதுரையிலிருந்து 212 கி.மீ.
வரிசை எண் : 142
சிறப்பு : காவிரி வலமாகச் சுழித்துச் செல்லும் இடமாதலால் திருவலஞ்சுழி எனப்பெயர். ஏரண்ட முனிவர், ஆதிசேஷன் பிரமன் வழிபட்ட தலம். வெள்ளைப் பிள்ளையார் இங்கு சிறப்பு . விநாயகர் மண்டபம் இந்திரன் அமைத்தது. சித்திர மண்டபம், கல் குத்துவிளக்கு அழகு. வெள்ளைப் பிள்ளையார் கடல் நுரையால் ஆனவர். இவருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்படுகிறது.
இறைவன்:கபர்த்தீஸ்வரர், செஞ்சடைநாதர், வலஞ்சுழிநாதர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வலஞ்சுழிநாதர் திருக்கோயில், வலஞ்சுழி, சுவாமிமலை அஞ்சல் – 612 302 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2454421, 0435-2454026

இருப்பிட வரைபடம்


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரிசூழ் திருவலஞ்சுழி வானனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
பாடல் கேளுங்கள்
 என்ன புண்ணியம் செய்தனை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க