banner
சோழநாடு - திருவாவடுதுறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 248 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. ல் அமைந்துள்ளது. குத்தாலம் தாண்டி திருவாலங்காடு என்னுமிடத்திலிருந்து 1 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 240 கி.மீ., சென்னையிலிருந்து 295 கி.மீ. திருச்சியிலிருந்து 141 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 153
சிறப்பு : திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக இறைவனை வேண்டிப் பொன் பெற்ற தலம். அம்பிகை வழிபட்ட தலம். திருமூலர் தங்கி இருந்து திருமந்திரம் அருளிய தலம். திருமூலர், திருமாளிகைத்தேவர் இவர்களின் சமாதிக் கோயில்கள் உள்ள தலம். இங்குள்ள நந்தி மிகப் பெரியது
இறைவன்:மாசிலாமணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
இறைவி : ஒப்பிலாமுலையம்மை, அதுல்யகுஜாம்பிகை
தலமரம் : படர் அரசு
தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை & அஞ்சல் – 609 803 (வழி) நரசிங்கன்பேட்டை மயிலாடுதுறை RMS, நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07 - 12.00 ; மாலை 04.00 - 08.30
தொடர்புக்கு : 04364-232055, 9443900408

இருப்பிட வரைபடம்


இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே
பாடல் கேளுங்கள்
 இடரினும் தளரினும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க