banner
சோழநாடு - திருச்செம்பொன்பள்ளி (செம்பொனார்கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 250 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 270 கி.மீ., சென்னையிலிருந்து 320 கி.மீ. திருச்சியிலிருந்து 110 கி.மீ. மதுரையிலிருந்து 240 கி.மீ.
வரிசை எண் : 159
சிறப்பு : கோயிலுக்குப் போகும் வழியில் வளைவு (arch) உள்ளது. வீரபத்திரர் தோன்றிய தலம். கோட்செங்கணான் திருப்பணி செய்த தலம். தாமரை போன்ற ஆவுடையார். இவ்வூர் மணிவாசக மன்றத்தார் சிறப்பானத் தொண்டுகளைச் செய்து வருகிறார்கள்.
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்பள்ளியார்
இறைவி : மருவார்குழலி, தாட்சாயணி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோயில் & அஞ்சல் – 609 309 தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9943797974

இருப்பிட வரைபடம்


தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர்கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்றாங்கு இமையவர் பரவியேத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச் செம்பொன்பள்ளியாரே
பாடல் கேளுங்கள்
 தந்தையும் தாயுமாகி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க