banner
சோழநாடு - திருப்புகலூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 259 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சன்னாநல்லூர் வந்து சாலையோரத்தில் உள்ள வளைவில் திரும்பி 10 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 257 கி.மீ., சென்னையிலிருந்து 302 கி.மீ. திருச்சியிலிருந்து 146 கி.மீ. மதுரையிலிருந்து 290 கி.மீ.
வரிசை எண் : 192
சிறப்பு : சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. உயிர்கள் இறைவன் திருவடியைப் புகலாக அடையும் தலம். சித்திரைச் சதயத்தில் அப்பர் பெருமான் இறைவன் திருவடியை அடைந்த தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு செங்கற்களைப் பொன்னாக இறைவன் மாற்றித் தந்தருளிய தலம். இத்தலத்தில் உள்ள மடத்தில் முருக நாயனார், சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர் கூடியிருந்து மகிழ்ந்துள்ளனர் என்ற செய்தி பெரியபுராணத்தில் உள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட கோயில். அகழியே தீர்த்தமாக உள்ளது.
இறைவன்: அக்னீபுரீஸ்வரர், கோணப்பிரான்
இறைவி : சூளிகாம்பாள், கருந்தார்குழலி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அக்னீபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் & அஞ்சல் – 609 704 (வழி) கண்ணபுரம் நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04366-292300

இருப்பிட வரைபடம்


எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும் போது உணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே - அப்பர்
பாடல் கேளுங்கள்
 எண்ணுகேன் என்சொல்லி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க