banner
சோழநாடு - திருப்புறம்பியம் (திருப்பிறம்பியம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 245 கி.மீ., கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் புளியஞ்சேரி சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கொட்டையூர். அதே சாலையிலேயே தொடர்ந்து மேலும் 3 கி. மீ. சென்றால் இக்கோயில். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 239 கி.மீ., சென்னையிலிருந்து 289 கி.மீ. திருச்சியிலிருந்து 100 கி.மீ. மதுரையிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 100
சிறப்பு : செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்னதால் இறைவனுக்கு சாட்சி நாதர் என்ற பெயரும் உண்டு. பிரளயத்திற்குப் புறம்பாயிருந்ததால் புறம்பியம் என்ற பெயர்.
இறைவன்: சாட்சீஸ்வரர், சாட்சிநாதேஸ்வரர், புன்னைவனநாதர்
இறைவி : கரும்பன்னசொல்லி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம் & அஞ்சல் – 612 303, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ;மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2000157

இருப்பிட வரைபடம்


மறியிலங்கு கையர் மழுவொன்றேந்தி
மறக்காட்டேன் என்றார் மழலைபேசிச்
செறியிலங்கு திண்தோள் மேல் நீறுகொண்டு
திருமுண்ட மாவிட்ட திலகநெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்றுநோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்து பூதம் சூழப்
புறம்பயம் நம்மூரென்று போயினாரே
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 மறியிலங்கு கையர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க