banner
சோழநாடு - திருப்பயற்றூர் (திருப்பயத்தங்குடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 237 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் கங்களாஞ்சேரி வந்து இடப்புறம் செல்லும் நாகப்பட்டினம் சாலையில் திருவிற்குடியிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 238 கி.மீ., சென்னையிலிருந்து 280 கி.மீ. திருச்சியிலிருந்து 94 கி.மீ. மதுரையிலிருந்து 265 கி.மீ.
வரிசை எண் : 195
சிறப்பு : பைரவ மகரிஷி வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் கண் நோயைப் போக்க வல்லது என்பர். வணிகன் ஒருவனுக்குப் பயற்று மூட்டைகளைத் தந்து உதவிய காரணத்தால் இறைவன் பயற்றுநாதர் எனப்பட்டார்.
இறைவன்: முக்தபுரீஸ்வரர், பயற்றுநாதர்
இறைவி : நேத்ராம்பிகை, காவியங்கண்ணி
தலமரம் : சிலந்தி
தீர்த்தம் : கருணா தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. முக்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி & அஞ்சல் – 609 701 (வழி) கங்களாஞ்சேரி நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 06.00 – 07.30
தொடர்புக்கு : 04366-272423

இருப்பிட வரைபடம்


தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணி உள்ளார்க்கு
எந்தயும் என்ன நின்ற ஏழுலகு உடனுமாகி
எந்தை எம்பிரானே என்றென்று உள்குவார் உள்ளத்தென்றும்
சிந்தையும் சிவமும் ஆவர் திருப்பயற்றூரனாரே- அப்பர்
பாடல் கேளுங்கள்
 தந்தையாய்த் தாயுமாகி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க