banner
சோழநாடு - திருப்பள்ளியின் முக்கூடல்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 267 கி.மீ. திருவாரூர் கடைத்தெரு வழியாக இருப்பு பாதை கடந்து 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 130 கி.மீ. மதுரையிலிருந்து 272 கி.மீ.
வரிசை எண் : 203
சிறப்பு : மூர்க்கரிஷி பூசித்த தலம். ஜடாயு தன் கடைசி நேரத்தில் இராவணனால் தாக்கப்பட்டு வீழ்ந்தபோது இங்கு காசி, கங்கை, இராமேஸ்வரம் ஆகியவற்றுக்கு இணையான ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்கிப் பேறு பெற்றாராம்.
இறைவன்: முக்கோணநாதர், திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர்
இறைவி : அஞ்சனாட்சி, மைம்மேவுகண்ணி
தலமரம் :
தீர்த்தம் : முக்கூடல் தீர்த்தம
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. முக்கோணநாதர் திருக்கோயில், திருப்பள்ளிமுக்கூடல், கேக்கரை அஞ்சல் – 610 002 (வழி) திருவாரூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 11.00 – 12.00 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 04366-244714

இருப்பிட வரைபடம்


ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
 அயனொடும் மாலறியாத ஆதியானை
தாராரும் மலர்க் கொன்றைச் சடையான் தன்னைச்
 சங்கரனைத் தன்னொப்பார் இல்லான் தன்னை
நீரானை காற்றானை தீயானானை
 நீள்விசும்பாய் ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை பள்ளியின் முக்கூடலானைப்
 பயிலாதே பாழே நான் உழன்றவாறே - அப்பர்
பாடல் கேளுங்கள்
 ஆராத இன்னமுதை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க