அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 240 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக
280 கி.மீ. செல்லவேண்டும். கும்பகோணம் காரைக்கால் சாலையில் 5 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து
265 கி.மீ., சென்னையிலிருந்து 315 கி.மீ. திருச்சியிலிருந்து 85 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 149
சிறப்பு : நஞ்சினை உண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளிய தலம். அதனால் திருநீலக்குடி எனப்பெயர்
பெற்றது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். இறைவருக்குத் தைல அபிஷேகம் விசேஷமானது. எவ்வளவு எண்ணெய்
வார்த்தாலும் வெளியே வழியாது
இறைவன்:மனோக்ஞ நாதசுவாமி, நீலகண்டேஸ்வரர்
இறைவி : அநூபமஸ்தனி
தலமரம் : பஞ்சவில்வம்
தீர்த்தம் : ஐந்து தீர்த்தங்கள்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில்,
திருநீலக்குடி & அஞ்சல் – 612 108
(வழி) கும்பகோணம்
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2470215, 9443463119
இருப்பிட வரைபடம்
|