banner
சோழநாடு - திருநாட்டியத்தான்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட் ரோடு வந்து வடபாதிமங்கலம் சாலையில் 7 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 235
சிறப்பு : கோட்புலிநாயனாரின் அவதாரத்தலம். இவருடைய இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகையை சுந்தரர் தம் புதல்வியராக ஏற்ற தலம்.
இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை
தலமரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி அஞ்சல் – 610 202, (வழி) மாவூர் திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 10.30 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04367-237707, 9443806496

இருப்பிட வரைபடம்


பூணாணாவதோர் அரவம் கண்டு அஞ்சேன்
புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்
பேணீராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவேனாகிலும் மறவேன்
காணீராகிலும் காண்பன் என்மனத்தால்
கருதீராகிலும் கருதி
நானேல் உம் அடிபாடுதல் ஒழியேன்
நாட்டியத்தான்குடி நம்பி - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 பூணாணாவதோர் அரவம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க