banner
சோழநாடு - திருக்கோடி (கோடிக்கரை, கோடியக்கரைக் குழகர்கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. அகத்தியான்பள்ளியிலிருந்து 2 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 244
சிறப்பு : திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதகலசத்தை வாயு எடுத்துச் சென்றபோது அதில் சிந்திய அமுதம் இத்தலத்துச் சிவலிங்கம் என்பர். இந்திரன், பிரமன், குழக முனிவர் வழிபட்ட தலம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.
இறைவன்: கோடிக்குழகர், அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
இறைவி : அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி
தலமரம் : குரா மரம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு & அஞ்சல் – 614 821, (வழி) வேதாரண்யம், வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 04369-272470

இருப்பிட வரைபடம்


கடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிகுழகீர்
அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே 
        - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 கடிதாய்க் கடற்காற்று


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க