banner
சோழநாடு - திருக்காறாயில் (திருக்காறைவாசல், காரவாசல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 236
சிறப்பு : காரகில் மரக்கடாக இருந்த இடம். பின்பு அதுவே காறாயில் என்று மாறியிருக்கவேண்டும் என்பர். கபால முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகராஜ சபை காணவேண்டியது. வெள்ளிப் பேழையுள் மரகதலிங்கம் உள்ளது. மூலவர் சுயம்பு.
இறைவன்: கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார்
இறைவி : கைலாசநாயகி
தலமரம் : பலா
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில், காறைவாசல் & அஞ்சல் – 610 202, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு: 04366-316222, 9442421063

இருப்பிட வரைபடம்


தாயானே தந்தையுமாகிய தன்மைகள்
ஆயானே ஆய நல்லன்பர்க் கினியானே
சேயானே சீர்திகழும் திருக்காறாயில்
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே 
        - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தாயானே தந்தையுமாகிய


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க