banner
சோழநாடு - திருக்கண்டியூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 282 கி.மீ., திருவையாறிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 3 கி.மீ.ல் உள்ளது. சாலையோரக் கோயில். செங்கல்பட்டிலிருந்து 302 கி.மீ., சென்னையிலிருந்து 357 கி.மீ. மதுரையிலிருந்து 192 கி.மீ.
வரிசை எண் : 129
சிறப்பு : சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று. அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. பிரமன் தலையை இறைவன்கொய்த தலம். சூரியன் வழிபட்ட தலம். சண்டேஸ்வரர் தனிக்கோயிலாக உள்ளது. மூலவர் சுயம்பு.
இறைவன்: பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர்
இறைவி : மங்களநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பிரமசிரக் கண்டீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டியூர் & அஞ்சல் – 613 202, (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9865302750

இருப்பிட வரைபடம்


வானவர் தானவர் வைகன் மலர் கொணர்ந்திட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவனாதி புராணன் அன்றோடியப் பன்றி எய்த
கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே
					- அப்பர்
பாடல் கேளுங்கள்
 வானவர் தானவர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க