banner
சோழநாடு - கொட்டையூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 236 கி.மீ., கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் 4 கி.மீ. சென்றால் கோயில். கும்பகோணம் –சுவாமிமலை பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்தில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 230 கி.மீ., சென்னையிலிருந்து 280 கி.மீ. திருச்சியிலிருந்து 91 கி.மீ. மதுரையிலிருந்து 222 கி.மீ.
வரிசை எண் : 98
சிறப்பு : ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் கொட்டையூர் என்றாயிற்று. சோழ மன்னனுக்கு கோடிலிங்கமாகக் காட்சி அளித்த்தால் இறைவன் கோடிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். இங்கு செய்யும் புண்ணியமும் பாவமும் பல கோடி மடங்காகப் பெருகும் என்பர். இங்கு பாவம் செய்தால் அதற்கு விமோசனமே இல்லை என்பதற்கு அடையாளமாக கொட்டையூரில் செய்த பாவம் கட்டையோடே என்ற பழமொழியும் இங்கு உண்டு.
இறைவன் : கோடிஸ்வரர்
இறைவி : கந்துக்கிரீடாம்பாள், பந்தாடுநாயகி
தலமரம் : ஆமணக்குச் செடி
தீர்த்தம் : அமுத தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. கோடிஸ்வரர் திருக்கோயில், கொட்டையூர், மேலக்காவேரி அஞ்சல் – 612 002 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2454421

இருப்பிட வரைபடம்


கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில்
கோடீச்சரத்து உறையும் கோமான்தானே
				- அப்பர்
பாடல் கேளுங்கள்
 கருமணி போல்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க