banner
சோழநாடு - அம்பர் பெருந்திருக்கோயில் (அம்பர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 257 கி.மீ. மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து அங்கிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் 5 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 245 கி.மீ., சென்னையிலிருந்து 290 கி.மீ. திருச்சியிலிருந்து 148 கி.மீ. மதுரையிலிருந்து 303 கி.மீ.
வரிசை எண் : 171
சிறப்பு : பிரமன் வழிபட்ட தலம். கோச்செங்கட்சோழனின் கடைசி திருப்பணி பெற்ற தலம். சோமாசிமாற நாயனார் வாழ்ந்த பதி. இது ஒரு மாடக்கோயில்.
இறைவன் : பிரமபுரீஸ்வரர்
இறைவி : சுகுந்தகுந்தளாம்பிகை, பூங்குழலம்மை
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பல் & அஞ்சல் – 609 503 (வழி) பூந்தோட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04366-238973

இருப்பிட வரைபடம்


சங்கணி குழையினர் சாமம் பாடுவார்
வெங்கனல் கனல்தர வீசியாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணலிறை செய்த கோயில் சேர்வரே  
பாடல் கேளுங்கள்
 சங்கணி குழையினர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க